ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

வடலூர் மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருஅறை தரிசனம்

கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தில் வள்ளலார் சித்தி பெற்ற திருமாளிகையில் திருஅறை தரிசனம்

News image

வள்ளலார் பயன்படுத்திய பொருள்கள் அடங்கிய பேழைக்கு வரவேற்பு அளித்த கருங்குழி கிராமத்தினர்.

Updated On :24 ஜனவரி 2019, 2:46 am IST


கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தில் வள்ளலார் சித்தி பெற்ற திருமாளிகையில் திருஅறை தரிசனம் புதன்கிழமை பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் ஆண்டுதோறும் தை மாதம், பூச நட்சத்திரத்தன்று ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு 148-ஆவது தைப்பூச ஜோதி தரிசனம் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனத்தைக் வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து, புதன்கிழமை வடலூரை அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தில் உள்ள வள்ளலார் சித்தி பெற்ற வளாகத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது.
முன்னதாக, வடலூர் ஞானசபை வளாகத்திலிருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருள்கள் அடங்கிய பேழை ஊர்வலமாக மேட்டுக்குப்பம் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. செல்லும் வழியில் இந்தப் பேழைக்கு பார்வதிபுரம், நைனார்குப்பம், கருங்குழி கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, மேட்டுக்குப்பத்தில் கிராம மக்கள் சீர்வரிசைப் பொருள்கள் அடங்கிய தட்டுகளுடன் பேழையை வரவேற்று திருமாளிகைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வள்ளலார் முத்தேக சித்தி பெற்ற திருஅறை பக்தர்கள் தரிசனத்துக்காக பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டிருந்தது.
இந்த திருஅறை தரிசனத்தை காண உள்ளூர் மட்டுமன்றி, வெளியூர் பக்தர்களும் மேட்டுக்குப்பத்தில் குவிந்தனர். 6 மணி நேரமே திறந்திருந்த திருஅறை தரிசனத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.
இந்த நிகழ்வையொட்டி, திருமாளிகை வளாகத்தில் சன்மார்க்க சொற்பொழிவுகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கி.ரேணுகாதேவி, செயல் அலுவலர் ஆர்.கருணாகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.