திருச்செந்தூர் கோயிலில் நாளை ஆனி வருஷாபிஷேகம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை (ஜூலை 11) ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் கோயிலில் நாளை ஆனி வருஷாபிஷேகம்
Published on
Updated on
1 min read

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை (ஜூலை 11) ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை  (ஜூலை 11) ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.  இதை முன்னிட்டு அன்றைய தினம்  அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம்,  5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகத்தை தொடர்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. 

காலை 9  மணிக்கு விமானங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.  மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது. அதே போல இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி அம்மனுடன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com