ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் திருபவித்ர உற்சவம் இன்று தொடக்கம்

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் உள்ள அரங்கநாதருக்கு திருபவித்ர உற்சவம் இன்று தொடங்கியது. 

News image
Updated On :9 செப்டம்பர் 2019, 7:43 am

DIN

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் உள்ள அரங்கநாதருக்கு திருபவித்ர உற்சவம் இன்று தொடங்கியது. 

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி, புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழை திருநாள் ஒன்பது நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். அதன்படி  இந்தாண்டுக்கான பவித்ர உற்சவம் இன்று தொடங்குகிறது. 

முதல் நாளான இன்று காலை 9.15-க்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு காலை 9.45-க்கு யாகசாலைக்கு வந்தார். அதைத்தொடர்ந்து மாலை 5.00 மணி  முதல் 7.00 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். 

பவித்ர உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு அருகில் உள்ள பவித்ரோத்சவ  மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதிப்பார். 

உற்சவத்தின் முக்கிய நிகழ்வான ஒன்றான பூச்சாண்டி சேவை எனப்படும் அங்க உபாங்க சேவை நாளை(செப்.10) மதியம் நடைபெறுகிறது. பூச்சாண்டி சேவையின் போது  மூலவர் ரெங்கநாதரின் முகம் உள்பட திருமேனி முழுவதும் நூலிழைகளைச் சுருள், சுருளாக வைத்து அலங்கரித்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், செப்.15-ம் தேதி நம்பெருமாள் நெல் அளவையும், செப்.17-ம் தேதி தீர்த்தவாரியும் கண்டருளுகிறார். செப்.18-ல் தைலக்காப்பு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைக்  கோயில் அறங்காவலர் குழு செய்துவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.