சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

 பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு

திருமலையில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான புதன்கிழமை, மோகினி அவதாரத்தில் உற்சவர் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.  

News image

மோகினி அவதாரத்தில் பல்லக்கில் புதன்கிழமை காலை ஸ்ரீகிருஷ்ணருடன் எழுந்தருளிய மலையப்பர்.

Updated On :24 செப்டம்பர் 2020, 2:44 am

திருப்பதி: திருமலையில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான புதன்கிழமை, மோகினி அவதாரத்தில் உற்சவர் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.  
ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த சனிக்கிழமை தொடங்கி நடந்து வருகிறது. அதன் ஐந்தாம் நாளான புதன்கிழமை காலையில் உற்சவர் மலையப்பர் மோகினி அவதாரத்தில் தாயாரின் அவதாரத்தில் ஸ்ரீகிருஷ்ணர் உடன்வர, பல்லக்கில் கோயிலுக்குள் புறப்பாடு கண்டருளினார்.
மோகினி அவதாரம் என்பதால் கண்ணாடி மண்டபத்தில் மலையப்பருக்கு அலங்காரம் நடைபெற்றது. தாயாரைப் போல் அலங்கரித்தபடி, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டு வரப்பட்ட பச்சைக் கிளிகள் மற்றும் ஜடை. மாலைகள் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு, முகத்தில் சிறு நாணம் கலந்த புன்னகையுடன் கையில் வெண்ணை உருண்டை ஏந்திய ஸ்ரீகிருஷ்ணன் உடன் வர மலையப்பர்  கோயிலுக்குள் கல்யாண உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். 
ஜீயர்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தையும், வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களையும் பாராயணம் செய்தனர். இதில் தேவஸ்தான அதிகாரிகள் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர். மலையப்பருக்கு நிவேதனம் சமர்ப்பித்து மீண்டும் அவரை பல்லக்கில் ரங்கநாயகர் மண்டபத்துக்கு அருகில் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ஜீயர்கள் சாத்துமுறை நடத்தினர். பின்னர் மலையப்பர் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டார். 
ஸ்நபன திருமஞ்சனம்:      பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மதிய வேளைகளில் உற்சவர்களுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன்படி புதன் மதியம் 1 மணி முதல் 3 மணி வரை உற்சவமூர்த்திகளுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.