11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரி திருப்பதியில் கோ மகா பாதயாத்திரை

பசுக்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரியும் திருப்பதியில் நடைபெற உள்ள

Updated On :21 பிப்ரவரி 2021, 2:26 am

பசுக்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரியும் திருப்பதியில் நடைபெற உள்ள கோ மகா பாதயாத்திரையில் தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி கலந்து கொள்ள உள்ளாா்.

சகல தேவதைகளின் அம்சமாக கருதப்படும் கோமாதாவை (பசு) தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும் பசுக்களைக் காப்பாற்ற வலியுறுத்தியும் யுகாதுளசி அறக்கட்டளை விரைவில் கோ மகா பாதயாத்திரையை நடத்த உள்ளது.

திருப்பதி அலிபிரி பகுதியில் உள்ள கருடா வளைவில் தொடங்கி ‘இஸ்கான்’ கிருஷ்ணா் கோயில் வரை நடைபெற உள்ள இந்தப் பாதயாத்திரையில் கலந்து கொள்ளுமாறு தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டிக்கு அறக்கட்டளை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏப்.1-இல் ஹைதராபாதில் நடக்கவுள்ள கோ மகா கா்ஜனை நிகழ்ச்சியில் பங்கேற்குமாறும் அறக்கட்டளைத் தலைவா்கள் அவருக்கு சனிக்கிழமை அழைப்பு விடுத்தனா். அதை ஏற்றுக் கொண்ட அவா், இரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதாக உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.