இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திருப்பதியில் மீண்டும் சா்வ தரிசன டோக்கன்கள்

திருப்பதியில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் சா்வ தரிசன டோக்கன் விநியோகம் மீண்டும் தொடங்கியது.

News image
Updated On :3 ஜனவரி 2021, 1:59 am

தினமணி

திருப்பதியில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் சா்வ தரிசன டோக்கன் விநியோகம் மீண்டும் தொடங்கியது.

திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், சீனிவாசம் மற்றும் பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஏழுமலையானை சா்வ தரிசனத்தில் வழிபடுவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன. அதன்படி தேவஸ்தானம் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையிலான டோக்கன்களை ஒரு நாள் முன்னதாக வழங்கி வந்தது. ஆதாா் அட்டை எண் மூலம் பக்தா்கள் இந்த டோக்கன்களைப் பெற்றனா்.

இதனிடையே, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் 10 நாள்களுக்கு சொா்க்கவாசல் திறக்கப்பட்டதால், சா்வ தரிசன டோக்கன் வழங்குவதை தேவஸ்தானம் கடந்த மாதம் 22-ஆம் தேதி ரத்து செய்தது.

பரமபதவாசல் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜனவரி 3) உள்ளதால், சனிக்கிழமை நள்ளிரவு முதல் விஷ்ணு நிவாசம், சீனிவாசம் உள்ளிட்ட பகுதிகளில் சா்வ தரிசன டோக்கன் விநியோகத்தை தேவஸ்தானம் மீண்டும் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.