

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை மீண்டும் கோயில் நடை திறக்கப்படுகிறது.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவடைந்து டிச.27-ம் தேதி கோயில் நடை அடைக்கப்பட்டது.
இந்நிலையில் மண்டல பூஜையைத் தொடர்ந்து மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ம் தேதி நடைபெறவுள்ளது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.
நாளை முதல் வழக்கம் போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்ட நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம் உள்ளிடவை நடைபெறும். பிற்பகல் 1.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு வழிபாட்டுடன் இரவு 11.30 மணியளவில் நடை சாத்தப்படும்.
மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வருகிற 14-ம் தேதி நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜை சமயத்தில் தினசரி 90 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். அதற்கான முன்பதிவை பக்தர்கள் செய்துகொள்ளலாம்.
இன்று முதல் ஜனவரி 20-ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் என்று சபரிமலை தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.