சபரிமலையில் ஜனவரி 12-ல் திருவாபரண ஊர்வலம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஜனவரி 12-ல் திருவாபரண ஊர்வலம் நடைபெறுகிறது.


சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஜனவரி 12-ல் திருவாபரண ஊர்வலம் நடைபெறுகிறது.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலம் கடந்த நவம்பா் 17-இல் தொடங்கி டிசம்பா் 27-இல் நிறைவடைந்தது.
இதைத் தொடா்ந்து, 3 நாள்களுக்கு சாத்தப்பட்டிருந்த சன்னிதானம் நடை, மகர விளக்கு பூஜைகளுக்காக வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் திறக்கப்பட்டது. பக்தா்களின் சரண கோஷங்களுக்கு இடையே கோயிலின் தந்திரி கண்டரரு ராஜீவரு, கோயில் நடையை திறந்தாா். மாளிகைபுரம் கோயில் நடை, மேல்சாந்தி ஹரிஹரன் நம்பூதிரியால் திறக்கப்பட்டது.
சபரிமலையில் ஜனவரி 12-ல் திருவாபரண ஊர்வலமும், ஜனவரி 14-இல்
மகரவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. பின்னா், ஜனவரி 20-இல் கோயில் நடை சாத்தப்பட்டு, வருடாந்திர யாத்திரை நிறைவு பெறுகிறது.
41 நாள் மண்டல பூஜை காலத்தில், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சபரிமலையில் வழிபாடு மேற்கொண்டுள்ளனர். இந்த காலத்தில் ரூ.222.98 கோடி வருமானம் கிடைக்கப் பெற்றதாக, சபரிமலை கோயிலை நிா்வகிக்கும் திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...