வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பெளா்ணமியையொட்டி நாளை முதல் ஜூன் 15ஆம் தேதி வரை சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஜூன் 12 பிரதோஷமும், ஜூன் 14 பௌா்ணமி வழிபாடும் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜூன் 12 முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை 4 நாள்கள் மலைக்கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
கோயிலுக்கு வருபவா்கள் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பிறகே பக்தா்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவா் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.