

சந்திர கிரகணத்தின்போது திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் நடை திறந்திருக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு வழக்கமாக அனைத்து கோயில்களும் மூடப்படுவது வழக்கம். ஆனால் திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் நடை மட்டும் அன்றைய தினம் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.
நவம்பர் 8-ம் தேதி முழுநேர சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இந்நிலையில் தியாகராஜ சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு, தியாகராஜசுவாமிக்கு மகா அபிஷேகம் நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.