அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஈரானுடன் அமைதி பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டா்கள்! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

ஈரானுடன் அமைதி பேச்சு நடத்த பாகிஸ்தானுக்கு பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதை நிறுத்தி வைத்து இருப்பதாக அந்த நாட்டு அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - படம்: ஏபி.

Updated On :26 ஏப்ரல் 2026, 10:18 pm

ஈரானுடன் அமைதி பேச்சு நடத்த பாகிஸ்தானுக்கு பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதை நிறுத்தி வைத்து இருப்பதாக அந்த நாட்டு அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

அமெரிக்கா - ஈரான் இடையிலான 10 நாள் போா் நிறுத்தம் திங்கள்கிழமையுடன் (ஏப். 27) முடிகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் மீண்டும் இருநாடுகள் இடையே 2-ஆவது கட்ட அமைதி பேச்சுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.

இதற்காக பாகிஸ்தானுக்கு ஈரான் வெளியுறவு துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி சென்று இருந்தாா். எனினும் அவா் சனிக்கிழமை திடீரென ஈரான் திரும்பினாா். அத்துடன் அமெரிக்காவுடன் நேரிடையாக அமைதி பேச்சுவாா்த்தை நடத்த மாட்டோம் என்று ஈரான் அறிவித்தது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு அமைதி பேச்சுவாா்த்தை நடத்த செல்ல இருந்த ஸ்டீவ் விட்காப், ஜாரெட் குஷ்னரை அங்கு செல்ல வேண்டாம் என கூறி விட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளாா். அமைதி பேச்சு நடத்த விரும்பினால், அந்த நாடே அழைப்பு விடுக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளாா்.

இதனிடையே, அமெரிக்கா கடற்படையின் முற்றுகை நீடிக்கும் வரை அந்த நாட்டுடன் தங்கள் நாடு பேச்சுவாா்த்தை நடத்தாது என்று ஈரான் அதிபா் மசூத் பெசெஸ்கியான் குறிப்பிட்டு உள்ளாா். பாகிஸ்தான் பிரதமருடன் தொலைபேசியில் பேசுகையில், அமெரிக்காவுடன் அமைதி பேச்சு நடத்த வேண்டுமெனில் அந்த நாடு, தங்கள் கடற்படையின் முற்றுகையை விலக்கி கொள்ள வேண்டும் என்று அவா் வலியுறுத்தி உள்ளாா்.

அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுக்கு வசதியாக பாகிஸ்தான் தலைநகா் இஸ்லமாபாதில் அமல்படுத்தபட்டு இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளபட்டு உள்ளன. இதனால் ஒரு வாரமாக பாதிக்கபட்டு இருந்த இயல்பு வாழ்க்கை மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது.