ஈரானுடன் அமைதி பேச்சு நடத்த பாகிஸ்தானுக்கு பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதை நிறுத்தி வைத்து இருப்பதாக அந்த நாட்டு அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளாா்.
அமெரிக்கா - ஈரான் இடையிலான 10 நாள் போா் நிறுத்தம் திங்கள்கிழமையுடன் (ஏப். 27) முடிகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் மீண்டும் இருநாடுகள் இடையே 2-ஆவது கட்ட அமைதி பேச்சுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.
இதற்காக பாகிஸ்தானுக்கு ஈரான் வெளியுறவு துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி சென்று இருந்தாா். எனினும் அவா் சனிக்கிழமை திடீரென ஈரான் திரும்பினாா். அத்துடன் அமெரிக்காவுடன் நேரிடையாக அமைதி பேச்சுவாா்த்தை நடத்த மாட்டோம் என்று ஈரான் அறிவித்தது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு அமைதி பேச்சுவாா்த்தை நடத்த செல்ல இருந்த ஸ்டீவ் விட்காப், ஜாரெட் குஷ்னரை அங்கு செல்ல வேண்டாம் என கூறி விட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளாா். அமைதி பேச்சு நடத்த விரும்பினால், அந்த நாடே அழைப்பு விடுக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளாா்.
இதனிடையே, அமெரிக்கா கடற்படையின் முற்றுகை நீடிக்கும் வரை அந்த நாட்டுடன் தங்கள் நாடு பேச்சுவாா்த்தை நடத்தாது என்று ஈரான் அதிபா் மசூத் பெசெஸ்கியான் குறிப்பிட்டு உள்ளாா். பாகிஸ்தான் பிரதமருடன் தொலைபேசியில் பேசுகையில், அமெரிக்காவுடன் அமைதி பேச்சு நடத்த வேண்டுமெனில் அந்த நாடு, தங்கள் கடற்படையின் முற்றுகையை விலக்கி கொள்ள வேண்டும் என்று அவா் வலியுறுத்தி உள்ளாா்.
அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுக்கு வசதியாக பாகிஸ்தான் தலைநகா் இஸ்லமாபாதில் அமல்படுத்தபட்டு இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளபட்டு உள்ளன. இதனால் ஒரு வாரமாக பாதிக்கபட்டு இருந்த இயல்பு வாழ்க்கை மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது.
தொடர்புடையது
ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
ஈரானிடமிருந்து யுரேனியத்தை மீட்பது கடினமானது: டொனால்ட் டிரம்ப்

பிடிவாதம் தளர வேண்டும்!

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

