சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு இன்று ருத்ர மகாபிஷேகம்!

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் புரட்டாசி மாத ருத்ர மகாபிஷேகம் சனிக்கிழமை (அக்.8) நடைபெறுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு: காத்திருக்கும் அதிகாரிகள்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு: காத்திருக்கும் அதிகாரிகள்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் புரட்டாசி மாத ருத்ர மகாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.

புகழ்பெற்ற இந்தக் கோயிலில் மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மாா்கழி, மாசி மாதங்களில், ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறும். அதன்படி, புரட்டாசி மாத மகாபிஷேகம் சித் சபை முன் உள்ள கனக சபையில் இன்று மாலை 6.30 மணியளவில் நடைபெறும்.

முன்னதாக, அதிகாலை 4 மணியளவில் சுவாமி சன்னதி திறக்கப்பட்டு உச்சி கால பூஜை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலையில் கனக சபையில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிா் உள்ளிட்ட பலவகை பொருள்களால் மகாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com