மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் 18 நாள்கள் நடைபெறும் பங்குனித் திருவிழாவையொட்டி த்வஜாரோஹனம் என்னும் கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குனித் திருவிழாவையொட்டி பெரிய கொடி மரத்தில் கருடன் உருவம் பொறித்த கொடியினை ஏற்றும் பட்டாட்ச்சாரியார்கள்.
பங்குனித் திருவிழாவையொட்டி பெரிய கொடி மரத்தில் கருடன் உருவம் பொறித்த கொடியினை ஏற்றும் பட்டாட்ச்சாரியார்கள்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் 18 நாள்கள் நடைபெறும் பங்குனித் திருவிழாவையொட்டி த்வஜாரோஹனம் என்னும் கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 18 நாள் திருவிழாவும், அதனை தொடர்ந்து 12 நாள்கள் விடையாற்றி விழாவும் நடைபெறுவதுடன் பெருமாள் எழுந்தருளும் வெளிப்பிரகார தேரோட்டம்,கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவங்களுடன் பங்குனித் திருவிழா நிறைவு பெறும்.

நிகழாண்டிற்கான தொடங்க விழா ,சனிக்கிழமை காலை த்வஜாரோஹனம் என்னும் கொடியேற்ற நிகழ்ச்சியில்,பெருமாள் சன்னதிக்கு எதிரே உள்ள பெருமாள் மண்டபத்தில் பெரிய கொடிமரத்தில் கருடன் உருவம் பொறித்த கொடியினை வேதமந்திரங்கள் கூறியப்பட்டி பட்டாச்சாரியார்கள் ஏற்றிவைத்தனர். பின்னர், சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

நிகழ்ச்சியில் , முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் , மன்னார்குடி ஒன்றியக் குழுத் தலைவர் டி.மனோகரன் , நகர்மன்ற உறுப்பினர் பா.சத்யா அன்பழகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பங்குனித்திருவிழா கொடியேற்றத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில்  அருள்பாலிக்கும் உற்சவர் ராஜகோபாலசுவாமி .
பங்குனித்திருவிழா கொடியேற்றத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில்  அருள்பாலிக்கும் உற்சவர் ராஜகோபாலசுவாமி .

இத்திருவிழாவினையொட்டி, ஒவ்வொருநாளும் உத்ஸவர் ராஜகோபாலசுவாமி, கல்யாணம், கண்ணன், கிருஷ்ணர், ராஜ,பட்டாபிராமர், வேணுகோபாலர், மாயவநாதன், வைகுண்டநான் உள்ளிட்ட சிறப்பு அலங்காரத்தில் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வெளிப் பிராகாரங்களின் வழியாக வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் அப்போது சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

இதில் முக்கிய நிகழ்வுகளாக,மார்ச்.16 .கண்டபேரண்ட பக்ஷி, 20. தங்க சூர்யபிரபை, 25. கோரதம், 26. காலை வெண்ணைத்தாழி, இரவு வெட்டுங்குதிரை, 27ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து,12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழா, மார்ச் 29ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 9ஆம் தேதி கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவத்துடன் நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை, நிர்வாக அலுவலர் எஸ்.மாதவன், மண்டகப்படிதாரர்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com