
பழநி முருகன் கோயிலில் மே 30ல் ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரோப்கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி மே 30-ம் தேதி ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதையொட்டி ரோப்கார் சேவை அன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் மின் இழுவை ரயில், படிப்பாளியைப் பயன்படுத்தி மலைக்கோயிலுக்குச் செல்லுமாறு கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.