தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திருப்பதியில் காத்திருப்பு நேரத்தை குறைக்க ஏஐ தொழில்நுட்பம்! ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு

திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக் கூட்டம்...

News image
- படம் | திருமலை திருப்பதி தேவஸ்தானம் எக்ஸ் தளம்
Updated On :18 நவம்பர் 2024, 5:08 pm

DIN

திருமலை திருப்பதி தேவஸ்தானம்(டிடிடி) அறக்கட்டளை வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் பங்கேற்ற அதன் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று(நவ. 18) நடைபெற்றது.

திருப்பதி கோயிலில் வழங்கப்படும் உலகப் பிரசித்தி பெற்ற லட்டுக்களில், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு நிர்வாகத்தில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை சுமத்தி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார். லட்டு விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாமென அறிவுறுத்தியுள்ள உச்சநீதிமன்றம் சிபிஐ இயக்குநர் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்று அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

இந்த நிலையில், திருப்பதியில் நிலவும் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் டிடிடி-இன் 54-ஆவது தலைவராக பிஆர் நாயுடு இம்மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், இன்று அவரது தலைமையில் திருமலையில் உள்ள அன்னமையா பவனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திருமலை கோவில் நிர்வாகம் சார்ந்த பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவாக, டிடிடி-இல் பணியாற்றும் ஹிந்துக்கள் அல்லாத பிற மதங்களைச் சேர்ந்த பணியாளர்களை வேறு துறைகளுக்கு மாற்றிட ஆந்திர அரசுக்கு டிடிடி அறக்கட்டளை வாரியம் வலியுறுத்தியுள்ளது. இல்லையெனில், மேற்கண்ட பணியாளர்களை விருப்ப ஓய்வெடுக்கவும் அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமியை தரிசிக்க பக்தர்கள் மணிகணக்கில் காத்திருக்கும் நிலையில், தரிசன காத்திருப்பு நேரத்தை 2 - 3 மணி நேரம் வரை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.