பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

இலுப்பக்கோரை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு!

விமர்சையாக நடைபெற்ற இலுப்பக்கோரை சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கு,,

News image
Updated On :7 ஏப்ரல் 2025, 12:06 pm IST

இலுப்பக்கோரை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயம் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இலுப்பக்கோரை கிராமத்தில் எழுந்தருளியிரும் அருள்மிகு சுப்பிரமணியசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கின. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த 5ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று. அதனை தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க கடம் புறப்பாடு, நடைபெற்றது. தொடர்ந்து விமான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசம் மற்றும் மூலவர், பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை இலுப்பக்கோரை கிராமவாசிகள் செய்திருந்தனர். குடமுழுக்கு விழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.