திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

ராகு பெயர்ச்சி: திருநாகேஸ்வரத்தில் சிறப்பு பூஜை!

ராகு பெயர்ச்சியை முன்னிட்டு திருநாகேஸ்வரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன்.

News image
திருநாகேஸ்வரம் கோயில்
Updated On :26 ஏப்ரல் 2025, 11:26 am

DIN

ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு ராகு பரிகார தலமான திருநாகேஸ்வரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் கிரிகுஜாம்பிகை - பிறையணி அம்மன் சமேத நாகநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவலில் நவக்கிரகங்களில் ராகு தலமாக விளங்கி வருகிறது.

இங்கு ராகு பகவான் தனி சன்னதியில் நாகவல்லி - நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார்.

இவரது திருமேனியில் பால் அபிஷேகம் செய்யும் போது அந்த பாலானது நீல நிறமாக மாறும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில், ராகு பெயர்ச்சி வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

ராகு பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வார். இது ராகுப்பெயர்ச்சி விழாவாக நடைபெறுகிறது. இந்தாண்டு ராகு பெயர்ச்சி விழா கடந்த 24ம் தேதி கணபதி ஹோமத்துடன் முதல் கால பூஜையுடன் துவங்கியது.

தொடர்ந்து நேற்று இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றன. ராகுபெயர்ச்சியான இன்று பிற்பகல் நான்காம் கால பூஜை நிறைவு பெற்று கடம் புறப்பாடும், அதனை தொடர்ந்து மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம், கலசாபிஷேகம் ராகு பகாவனுக்கு நடைபெற்றது.

தொடர்ந்து மாலை 4:20 மணிக்கு, ராகுபகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அப்போது, ராகு பகவானுக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்களுக்கு கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு ராகுபகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் புறப்பாடு நடைபெற உள்ளது. கடந்த 23ம் தேதி முதல் வரும் 28ம் தேதி லட்ச்சார்ச்சனை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.