/

முத்துக்கண் மாரியம்மன் கோயிலில் 5 லட்சம் பணத்தால் அலங்காரம்!

முத்துக்கண்மாரியம்மன் கோவிலில் 5 லட்சம் பணத்தால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

News image

முத்துக்கண் மாரியம்மன் கோயில்

Updated On :25 ஜூலை 2025, 11:59 am IST

இரண்டாவது ஆடி வெள்ளியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ முத்துக்கண்மாரியம்மன் கோவிலில் 5 லட்சம் பணத்தால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகின்றது. அதிலும் ஆடிவெள்ளி, ஆடி செவ்வாய் அம்மன் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறுவதும் வழக்கம். அதன்படி ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று திருச்சி வரகனேரி நித்தியானந்தபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துக்கண்மாரியம்மன் கோயிலில் இன்று அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

உலகில் உள்ள மக்கள் அனைவரும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டி முத்துக்கண் மாரியம்மனுக்கு ரூ 500, ரூ 200, ரூ 50, 20 மற்றும் 10 என்று அனைத்து விதமான இந்திய ரூபாய் நோட்டுகளினாலும் 5 லட்சம் ரூபாய் நோட்டுகளை கொண்டு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

Summary

On the occasion of Aadi Velli, the goddess was decorated at the Arulmigu Sri Muthukanmariamman Temple with a sum of 5 lakhs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.