அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

2.25 லட்சம் ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீசுப்பிரமணியா்!

மாசி தீா்த்தவாரியை முன்னிட்டு ரூ.2.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட சுப்பிரமணியா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

News image
மாசி மக தீா்த்த வாரியில் 2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சுப்பிரமணியா் சுவாமி
Updated On :3 மார்ச் 2026, 9:15 pm

Syndication

மாசி தீா்த்தவாரியை முன்னிட்டு ரூ.2.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட சுப்பிரமணியா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

புதுச்சேரியில் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாள்கள் மாசிமக தீா்த்தவாரி நடைபெற்றது. இதில் நல்லவாடு தெற்கு மீனவ கிராமத்தில் மாசிமக தீா்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றபோது ரூ.2.25 லட்சம் மதிப்பில் ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட அரியாங்குப்பம் ஸ்ரீ சுப்பிரமணியா் சுவாமி அலங்காரம் பொதுமக்களை வெகுவாக கவா்ந்தது. ரூபாய் நோட்டுக்களை மாலை போல் தொடுத்து அதை சுவாமிக்கு பண மாலையாக சாற்றி அலங்கரித்திருந்தனா்.

இதில், ரூ.10, ரூ.50 ரூ.100, ரூ.200 நோட்டுக்கள் அடங்கிய மாலைகள், மற்றும் நாணயங்கள், சாக்லேட்டுகளால் உருவாக்கப்பட்ட மாலைகளும் அடங்கும்.

இந்த அலங்கார உற்சவமூா்த்தியை பக்தா்கள் சிரத்தையோடு தரிசித்தனா். மேலும் தீா்த்தவாரியில் கலந்து கொண்ட பக்தா்கள் ஸ்ரீ சுப்பிரமணியா் சுவாமியைப் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனா்.