டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயிலில் தீ மிதி திருவிழா!

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயிலில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்.

News image
அம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்,
Updated On :6 மே 2025, 3:31 am

DIN

விராலிமலை: விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மெய்கண்ணுடையாள் கோயிலில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் 8-ம் நாளான இன்று(மே 6) முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர்.

ஆண்டுதோறும் இக்கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழாண்டு, கடந்த ஏப்ரல், 29-ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது, தினமும் காலை, மாலை வேளைகளில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவின் 8-ம் நாளான (இன்று) செவ்வாய்க்கிழமை, கோயில் முன்னாள் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் (தீ குண்டம்) நூற்றுக்கணக்கான பக்தர்கள் தலையில் பால்குடம் சுமந்து வந்து ஓம் சக்தி பராசக்தி முழக்கமிட்டு தீ குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

தொடர்ந்து, மா விளக்கு, குழந்தைகளை சுமக்கும் கரும்பு தொட்டி, ஈரத்துணியுடன் தரையில் உருண்டபடி கோயில் வளாகத்தை சுற்றி வரும் அங்கபிரதட்சணம், பால்குடம் உள்ளிட்ட வழிபாடுகளை ஆண்கள், பெண்கள் செய்தனர்.

9- ஆம் விழாவான நாளை புதன்கிழமை(மே 7) ஆடு, கோழி பலியிடுதல் நிகழ்வும் மாலையில் இளைஞர்களின் படுகளம் விளையாட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் நூற்றுக்கணக்கான போலீஸார் விராலிமலை முழுவதும் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.