குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயிலில் 75-வது ஆண்டு அமிர்த மகோத்சவத்தின் சிறப்புப் பூஜையில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான குஜராத் சோமநாதர் கோயிலின் 75-வது ஆண்டு மகோத்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சோமநாதர் கோயிலின் சிறப்புப் பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேகம் மற்றும் த்வஜாரோஹண சடங்குகள், பிரதிஷ்டை சடங்கு மற்றும் கோயில் கொடியேற்றம் ஆகியவற்றில் பிரதமர் பங்கேற்றார்.
அமிர்த மகோத்வசக் கொண்டாட்டங்களின்போது விமானப்படையின் சூர்ய கிரண் விமான சாகசக் குழுவின் வான்வழி சாகச நிகழ்ச்சியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.
சோமநாத் ஆலய வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு, சோமநாத் நகரில் நடைபெற்ற சாலைப் பயணத்தின் போது, கிர் சோமநாத் பகுதியில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.
சோமநாதர் ஆலயத்திற்குச் செல்லும் வழியிலும் சாலைப் பயணத்தை மேற்கொண்டபோது, இதில் ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பளித்தனர். நகரின் முக்கியப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில்,
புனரமைக்கப்பட்ட சோமநாதர் கோயிலின் பிரதிஷ்டையின் 75-வது ஆண்டு விழாவில் சோமநாதரின் புனிதத் தலத்திற்கு வருவது தெய்வீக அனுபவத்தைத் தந்தது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அனுபவித்த தருணத்தை இன்று மீண்டும் பெற்றுள்ளேன். சோமநாதர் அமிர்த மகோத்சவத்தின் பக்திமயமான சூழல் அசாரண ஆற்றலைப் பரப்புகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
Summary
Prime Minister Narendra Modi on Monday participated in the Vishesh Maha Puja organised as part of the 'Somnath Amrit Mahotsav' celebrations at the Somnath Temple in Gujarat.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செஷல்ஸ் நாட்டிலுள்ள தமிழ் விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

செஷல்ஸில் நவ விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

திருப்போரூரில் 23 -வது அமிர்த வித்யாலயம் பள்ளி தொடக்கம்!

சோமநாதர் கோயிலில் 75-வது ஆண்டு விழாவில் மோடி!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



