மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லைக்காளியம்மன் கோயில் தெப்போற்சவம்!

தில்லைக்காளியம்மன் கோயிலில் நடைபெற்ற தெப்போற்சவம் குறித்து...

News image

சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தில்லைக்காளியம்மன் கோயில் தெப்போற்சவம். - படம்: தினமணி

Updated On :1 மணி நேரம் முன்பு

சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தெப்பகுளம் தூர்வாரி புணரமைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்ப உற்சவம் திங்கள்கிழமை இரவு வெகு சிறப்பாக நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஆனந்த கூத்தன் நடராஜப் பெருமான்தான் மட்டும் தனியே ஆடவில்லை. காளிதேவியுடன் வாது செய்து, போட்டி அமைத்து ஊர்த்துவ தாண்டவம் ஆடியருளினார். தில்லையின் எல்லையில் வீற்று அகிலாண்ட நாயகியும் தில்லைக்காளியாகி நம் தீவினையை போக்கியருளுகின்றார்.

தீயவைகளை அழிக்கும் கோபசக்தியாக தில்லைக்காளியும், நல்லவைகளை அருள் சாந்த சொருபிணியாக தில்லையம்மனாக இங்கு வீற்றுள்ளனர். இந்தச் சிறப்பு வாய்ந்த தில்லைக்காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா மே 7 ஆம் தேதி இரவு விநாயகர் வழிபாடு, காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தில்லைக்காளியம்மன் கோயில் தெப்போற்சவம்.

சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தில்லைக்காளியம்மன் கோயில் தெப்போற்சவம். - படம்: தினமணி

மே 8 ஆம் தேதி சூரியபிரபை வாகன வீதி உலா, 9 ஆம் தேதி சந்திரபிரபை வாகன வீதி உலா, 10-ம் தேதி பூதகி வாகன வீதி உலா, 11-ம் தேதி தெருவடைச்சான் (அன்ன வாகனம்) வீதி உலா, 12-ம் தேதி காமதேனு வாகன வீதி உலா, 13-ம் தேதி கைலாய வாகன வீதி உலா, 14-ம் தேதி ரிஷப வாகன வீதி உலா, மே 15-ம் தேதி வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

வடக்குவீதி வளாகத்திலிருநந்து தேரில் எழுந்தருளிய தில்லையம்மன் நான்கு வீதிகள் வலம் வந்தார். மழையிலும் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். மே 16 ஆம் தேதி சிவப்பிரியையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மே 17 ஆம் தேதி மஞ்சள்நீர் விளையாட்டு, முத்துப்பல்லக்கு வீதிஉலாவும் நடைபெற்றது.

மே.18-ம் தேதி திங்கள்கிழமை 2.75 கோடி செலவில் தூர்வாரி புணரமைக்கப்பட்ட தில்லையம்மன் கோயில் திருக்குளத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்ப உற்சவம் மற்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றறது. தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மே.19-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு திருஊஞ்சல் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் வேணு. நரசிங்கபெருமாள் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.

Summary

In observance of the Vaikasi Festival at the Thillai Kaliyamman Temple in Chidambaram and following the dredging and renovation of the temple tank the Float Festival was celebrated with great grandeur on Monday night, marking its return after a hiatus of 30 years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.