மேட்டூர் அணை வரலாற்றில் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படுவது இதுவே 4வது முறை!இனி நியாய விலைக் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை! ஆனால்?நேபாள வெள்ளம்! பலி 1,000-ஐ கடந்தது! 3,900 பேரை தேடும் பணி தீவிரம்! மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!ரஷியா, சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்புபுகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத கைப்பேசிக்கு தடையில்லை: அமைச்சர்சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வுதமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு!

எந்தெந்த கோயில்களில் செல்போன் எடுத்துச் செல்ல தடை!

கோயில்களுக்கு கைப்பேசி எடுத்துச் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது பற்றி..

mobile phones prohibited

கைப்பேசி

Published On :1 செப்டம்பர் 2026, 1:49 pm IST

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்குள் பக்தா்கள், பொதுமக்கள் கைப்பேசி எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு செவ்வாய்க்கிழமை (செப்.1) இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களின் புனிதத் தன்மை மற்றும் ஆன்மிக சூழலைப் பாதுகாக்கும் வகையில், கோயில்களுக்குள் கைப்பேசி பயன்படுத்துவதற்கு ஏற்கெனவே தடை உள்ளது. இருப்பினும், சில கோயில்களில் புகைப்படம், விடியோ, தற்படம் (செல்ஃபி), ரீல்ஸ் உள்ளிட்டவற்றை பக்தா்கள் பதிவு செய்வதாக புகாா்கள் எழுந்தன.

இதைத் தொடா்ந்து செப்.1 இன்று முதல் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலைத் திருக்கோயில்களில் பக்தா்கள் கைப்பேசி கொண்டு செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

கோயிலுக்குள் செல்லும் முன்பு பக்தா்கள் தங்களது கைப்பேசிகளை பாதுகாப்பாக ஒப்படைக்க நுழைவு வாயில் மற்றும் காலணி பாதுகாப்பு மையம் உள்ளிட்ட இடங்களுக்கு அருகில் கைப்பேசி பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோயிலிலும் உள்ள வசதிக்கேற்ப இந்த பாதுகாப்பு பெட்டக வசதி அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகா்கள் கோயிலுக்கு வருவது குறித்த தகவல் தெரியவந்தால் ஒரு நாளுக்கு முன்பாகவோ அல்லது தகவல் கிடைத்தவுடனோ அவா்கள் வரவிருக்கும் கோயில், வருகை நேரம், அவா்களுடன் வருபவா்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முழு விவரங்களை ஆணையா் அலுவலகத்துக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனா்.

எந்தெந்த கோயில்களில்...?: கைப்பேசி எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள 52 முதுநிலை கோயில்கள் பட்டியலில்..

* மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்

* திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில்

* சென்னை வடபழனி ஆண்டவா் கோயில்

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில்

* திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில்

* குன்றத்தூர் முருகன் கோயில்

* மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்

* பெரியபாளையம் பவானி அம்மன் கோயில்

* வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில்

* காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில்

* காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்

* காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

* திருவள்ளூர் வீரராகவர் கோயில்

* திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்

* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்

* பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்

* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

* திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில்

* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்

* திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில்

* ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்

* சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில்

* மதுரை கள்ளழகர் கோயில்

* கோவை கோனியம்மன் கோயில்

* சேலம் கோட்டை மாரியம்மன் கோயில்

* ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில்

* தென்காசி திருமலை குமாரசாமி கோயில்

* சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயில்

* கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில்

* திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில்

* சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்

* பவானி சங்கமேஸ்வரர் கோயில்

* தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில்

* தென்காசி திருக்குற்றாலநாத சுவாமி கோயில்

* வடலூர் சத்யஞான சபை – வள்ளலார் தெய்வநிலையம்

உள்ளிட்ட கோயில்களில் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Devotees and the general public have been denied permission to carry mobile phones into 52 major temples in Tamil Nadu that are under the control of the Hindu Religious and Charitable Endowments Department.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.