FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வுமுதல்வர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர் சந்திப்பு!போர்ப் பதற்றம்! ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!கண்ணியத்துடன் பேசுங்கள்: சட்டப்பேரவையில் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தல்பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் நாளை முதல் செல்போன் எடுத்துச் செல்ல தடை!

புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலில் செல்போன் எடுத்துச் செல்வது பற்றி..

Punnainallur Mariamman Temple

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் - DPS

Published On :31 ஆகஸ்ட் 2026, 5:46 pm IST

புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலில் செப். 1 (நாளை) முதல் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் அருகே புன்னை நல்லூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அம்மன் புற்று மண்ணால் ஆனதால் அபிஷேகம் எதுவும் நடைபெறாது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே 48 நாள்கள் தைலாபிஷேகம் நடைபெறும். அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு தங்கி அம்மனை வழிபட்டால் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் முத்து பல்லாக்கு திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஆலயத்தின் பாதுகாப்பு கருதி நாளை முதல் கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயிலின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் செல்போன் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் ரூ. 5 வைப்புத் தொகையாகச் செலுத்தி செல்போனை பாதுகாப்பாக வைத்துச் செல்லலாம். தடையை மீறி ஆலயத்திற்குள் செல்போன் எடுத்துச் சென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The temple administration has announced that carrying mobile phones into the Punnainallur Mariamman Temple is prohibited starting tomorrow, September 1.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.