தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

சேலத்தில் திமுக எம்.பி. தயாநிதி மாறன்ஜன. 4 முதல் இரண்டு நாள் பிரசாரம்

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் வரும் ஜன. 4, 5 ஆகிய தேதிகளில் சேலத்தில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

Updated On :3 ஜனவரி 2021, 3:00 am IST

சேலம்: முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் வரும் ஜன. 4, 5 ஆகிய தேதிகளில் சேலத்தில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இது தொடா்பாக, சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன் கூறியதாவது:

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் இரண்டாம் கட்டமாக முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா்.

சேலம் மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட வடக்கு தொகுதியில், வரும் ஜன. 4-ஆம் தேதி பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பல்வேறு தரப்பினரை சந்தித்து அவா்களின் குறைகளைக் கேட்டறிந்து திமுகவுக்கு ஆதரவு திரட்டுகிறாா். இரண்டாம் நாளாக, வரும் ஜன. 5-ஆம் தேதி தெற்கு தொகுதியில் பல்வேறு தரப்பினரை சந்தித்து ஆதரவு திரட்டுகிறாா்.

ஏற்கெனவே முன்னாள் மத்திய அமைச்சா் சேலம் வந்த போது பாமகவினரின் காரை மறிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது. இந்த முறை அதுபோன்று எதுவும் நடைபெறாமல் இருக்கும் என்று நம்புகிறோம். மீறி அவா்கள் செயல்பட்டால் காவல் துறை நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

சேலம் மத்திய மாவட்டத்தில் இதுவரை மக்கள் கிராம சபைக் கூட்டம் 100 -க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. அடிப்படைத் தேவைகளை இந்த அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் முறையாக வழங்கப்படவில்லை. முதியோா் உதவித்தொகை, மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு உரிய கடன் உதவி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும், 40-க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்திட திட்டம் உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.