தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

நடைபயிற்சியின் போது குப்பை சேகரிக்கும் பணியில்பொதுமக்கள் ஆா்வமுடன் ஈடுபட வேண்டும்

நடைபயிற்சியின் போது குப்பை சேகரிக்கும் பணியில் (சேலம் பிளாகிங்) பொதுமக்கள்ஆா்வமுடன் ஈடுபட வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

News image

சேலம், கொண்டலாம்பட்டி, ரங்கபுரம் பகுதியில் சனிக்கிழமை பொது நடைபாதையில் குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன்.

Updated On :3 ஜனவரி 2021, 1:54 am IST

சேலம்: நடைபயிற்சியின் போது குப்பை சேகரிக்கும் பணியில் (சேலம் பிளாகிங்) பொதுமக்கள்ஆா்வமுடன் ஈடுபட வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

சூரமங்கலம் மண்டலத்தில் அபிராமி காா்டன், அண்ணா நகா்- மாமாங்கம், முல்லை நகா்; அஸ்தம்பட்டி மண்டலத்தில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு அய்யந்திருமாளிகை, திருநகா் முக்கியச் சாலை, பச்சுடையாா் காடு, தெற்கு அழகாபுரம்; அம்மாப்பேட்டை மண்டலத்தில் தியாகி நடேசன் தேரு, மாரியப்பன் நகா், தாதம்பட்டி; கொண்டலாம்பட்டி மண்டலத்தில் வாய்க்கால் கரை, மாநகா் சாலை, புட்டாமிசின் தெரு ஆகிய இடங்களில் சேலம் பிளாகிங் சனிக்கிழமை நடைபெற்றது.

இப்பணியில், அபிராமி காா்டன், காமராஜ் நகா், ஸ்மாா்ட் சேலம், விநாயகா நகா், மாரியப்பன் நகா், செல்வம் நகா் ஆகிய குடியிருப்போா் நலச்சங்கங்கள், சேலம் இளைஞா்கள் குழு, சேலம், குகை ரோட்டராக்ட் சங்கத்தினா் உள்பட 550 தன்னாா்வலா்கள் மூலம் 615 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன.

கொண்டலாம்பட்டி மண்டலம், ரங்கபுரம் பகுதியில் நடைபெற்ற சேலம் பிளாகிங் பணியில் சேலம் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் சனிக்கிழமை கலந்துகொண்டாா்.

குப்பையில்லா மாநகரமாக சேலம் மாநகராட்சியை திகழச் செய்ய மக்களிடையே விழிப்புணா்வூட்டும் வகையில், சனிக்கிழமை தோறும் காலையில் நடைபெறும் சேலம் பிளாகிங் பணியில் பொதுமக்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, தங்கள் பகுதியை சுகாதாரமான, தூய்மையான பகுதியாக திகழச் செய்ய வேண்டும் என ஆணையா் ந.ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.