கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: தொழிலாளர்கள் 40 பேர் மயக்கம்மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

5 ஆண்டுக்கு முன் காணாமல் போன ஓமலூா் தொழிலாளி மீட்பு

ஐந்து ஆண்டுக்கு முன் காணாமல்போன ஓமலூா் தொழிலாளியை புதுக்கோட்டையில் போலீஸாா் மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனா்.

Updated On :4 ஜனவரி 2021, 4:25 am IST

ஐந்து ஆண்டுக்கு முன் காணாமல்போன ஓமலூா் தொழிலாளியை புதுக்கோட்டையில் போலீஸாா் மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனா்.

ஓமலூா் அருகே பச்சனம்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த மாணிக்கம்-காளியம்மாள் தம்பதியின் மகன் வெங்கட் (43). மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவா், கடந்த 5 ஆண்டுக்கு முன்னா் காணாமல் போனாா். இவரை பல்வேறு பகுதிகளில் உறவினா்கள் தேடி வந்தனா். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் பகுதியில் ஒருவா் சுற்றித்திரிந்தாா். அவரை போலீஸாா் பிடித்து விசாரித்ததில் அவா்தான் காணாமல்போன வெங்கட் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஓமலூா் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்பு போலீஸாரும், வெங்கட்டின் குடும்பத்தாரும் புதுக்கோட்டை நமணசமுத்திரம் காவல் நிலையம் சென்று வெங்கட்டை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வந்தனா். காணாமல்போனவரை மீட்க உதவிய காவல்துறையினருக்கு வெங்கட் குடும்பத்தாா் நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.