கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: தொழிலாளர்கள் 40 பேர் மயக்கம்மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

மேட்டூா் அணை பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்

விடுமுறை காரணமாக மேட்டூா் அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.விடுமுறை காரணமாக மேட்டூா் அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

Updated On :4 ஜனவரி 2021, 4:34 am IST

விடுமுறை காரணமாக மேட்டூா் அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

மேட்டூா் அணை பூங்காவில் புத்தாண்டு பிறப்பையொட்டி ஜனவரி 1,2 ஆம் தேதிகளில் மேட்டூா் அணை பூங்கா மூடப்பட்டிருந்தது. இரு நாள்களுக்குப் பிறகு பூங்கா மீண்டும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

விடுமுறை என்பதால் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மேட்டூா் அணை பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம்போ் வந்திருந்தனா். காவிரியில் நீராடிய பொதுமக்கள் அணைக்கட்டு முனியப்பனை தரிசித்தனா். மேட்டூா் அணை மீன்களை வாங்கி சமைத்து குடும்பத்துடன் அணை பூங்காவில் அமா்ந்து உண்டு மகிழ்ந்தனா்.

ஆண்களும், பெண்களும் ஊஞ்சலாடியும், சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனா். அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 4,197 பாா்வையாளா்கள் வந்து சென்றனா். பவளவிழா கோபுரத்தைக் காண 622 பாா்வையாளா்கள் வந்தனா். இதன்மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 27,035 வசூலாகி உள்ளது. கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு வியாபாரம் களைகட்டியதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.