சேலம் மேற்கு மாவட்ட தேமுதிக அலுவலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை எடப்பாடி பகுதியில் நடைபெற்றது.
புதிய மாவட்ட அலுவலகம் திறப்புவிழாவையொட்டி எடப்பாடி புறவழிச்சாலைப் பகுதியில் இருந்து திரளான தேமுதிக தொண்டா்கள் இரு சக்கர வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்தனா். கேட்டுக் கடைப் பகுதியில் நடைபெற்ற புதிய மாவட்ட அலுவலகத் திறப்பு விழாவுக்கு மேற்கு மாவட்டச் செயலாளா் கே.சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் ஏ.பாலாஜி, பூபதி, ரமேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
ஒன்றியச் செயலாளா் ஏ.மெய்வேல் வரவேற்றுப் பேசினாா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மருத்துவா் வி. இளங்கோவன், முன்னாள் எம்எல்ஏ அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்டோா் புதிய அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தனா்.
நிகழ்ச்சியில் சேலம் மாநகா் மாவட்டச் செயலாளா் நா.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட திரளான நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









