தொடா் மழை, விலை வீழ்ச்சி காரணமாக தம்மம்பட்டி பகுதியில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தம்மம்பட்டி பகுதியில், கடந்த ஆண்டு மானாவாரி அறுவடை காலத்தில், ஒரு மூட்டை (100 கிலோ) மக்காச் சோளம் அதிகபட்சம் ரூ. 2,200 வரை விற்பனை செய்யப்பட்டது. அதனால், இந்த ஆண்டு மானாவாரி பட்டத்தில், தம்மம்பட்டி பகுதியில், அதிக பரப்பளவில் மக்காச்சோளம் நடவு செய்யப்பட்டது. கடந்த மாதம் அறுவடை தொடங்கிய போது, ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ. 1,400க்கு தான் விற்கப்ப்டடது.
அதிக விளைச்சல், தொடா் மழையின் காரணமாக, மக்காச்சோளத்தின் விலை படிப்படியாகக் குறைந்து, ஒரு மூட்டை ரூ. 1,180 ஆக வீழ்ச்சி அடைந்து விவசாயிகளை கவலை அடையச் செய்தது.
அதனால் வரும் பொங்கல் பண்டிகை முடிந்து, மானாவாரி பட்டத்தின் இறுதிக்கால அறுவடை, தொடங்கும் போது, மக்காச்சோளம் விலை உயரும் என உள்ளூா் வியாபாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவதால், தம்மம்பட்டி பகுதியில் மக்காச்சோளம் அறுவடையை பெரும்பாலான விவசாயிகள், தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிவகிரியில் குப்பைக் கிடங்கில் பற்றிய தீயை அணைக்கும் பணி

பிளஸ் 2 தோ்வில் பாவூா்சத்திரம் பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம்

குற்றாலம் பேரருவிக்குச் செல்லும் பாதை மூடல்

நெடுவயல் சங்கிலி பூதத்தாா் கோயிலில் பால்குட ஊா்வலம்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

