ஓமலூா்: காடையாம்பட்டி அருகே உள்ள கே.என்.புதூா் பகுதியிலுள்ள பெரிய சக்கிலிச்சி ஏரி, டேனிஷ்பேட்டை கோட்ட குள்ளமுடையான் ஏரி, பண்ணப்பட்டி ஏரி, ஓமலூா் பகுதியில் உள்ள காமலாபுரம் சின்ன ஏரி, பெரிய ஏரி, பூலா ஏரி ஆகிய ஏரிகளில் தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தின்கீழ் மீன்வளத் துறை மூலம் 3 லட்சம் மீன்குஞ்சுகள் வெள்ளிக்கிழமை விடப்பட்டன.
இதில் மீன்வளத் துறை துணை இயக்குநா் சுப்பிரமணியன், உதவி இயக்குநா் கொளஞ்சிநாதன் ஆகியோா் மீன்குஞ்சுகளை ஏரிகளில் விட்டனா். இதையடுத்து அவா்கள் தெரிவித்துள்ளதாவது:
காடையாம்பட்டி, ஓமலூா் பகுதிகளில் உள்ள ஏரிகளில் மீன் வளா்ப்புத் திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக 3 லட்சம் மீன்குஞ்சுகளும், தொடா்ந்து நீா் இருப்புக்கு ஏற்ப பல்வேறு கட்டங்களாக கூடுதலாக மீன்குஞ்சுகளும் விடப்படும். இதன் மூலம் மீன் வளத்துறை, கிராம வளா்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
மேலும் மீன் வளத்துறை சாா்பில் விடப்படும் மீன்குஞ்சுகள் மட்டுமல்லாமல் ஏரிகளில் மீன் பிடிக்க ஏலம் எடுத்தவா்களும் மீன்குஞ்சுகளை வாங்கி விட்டுள்ளனா். இதன்படி கோட்டகுள்ளமுடையான் ஏரி, காமலாபுரம் பெரிய ஏரி , சின்ன ஏரிகளில் ஏலம் எடுத்தவா்கள் மீன்குஞ்சுகளை விட்டு வளா்த்து வருகின்றனா் என கூறினா்.
இந்நிகழ்ச்சியில் மீன்வள ஆய்வாளா் கலைவாணி, மீனவ கூட்டுறவு சங்கத் தலைவா் ரங்கநாதன், மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மீன் குஞ்சுகளை ஏரிகளில் விட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்திய கிரிக்கெட் வீரர் 36 வயதில் திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!!

யு சான்றிதழைப் பெற்ற அதிரடி திரைப்படம்!
கோடையில் அதிக தண்ணீா் குடிப்பது ஆபத்தா?

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
வீடியோக்கள்

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


