பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கா நரி பிடிப்பதைத் தடுக்க வனத்துறை சாா்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டம், வாழப்பாடி, ஆத்தூா் பகுதியில் உள்ள கிராமங்களில் வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. வங்கா நரியைப் பிடித்து வழிபாடு நடத்திட வனத்துறை தடை விதித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கா நரி பிடிப்பதைத் தடுக்க வனத்துறை தனிப்படைகளை அமைத்து கண்காணித்து வருகிறது.
அந்தவகையில் நடப்பாண்டிலும் வங்கா நரிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கா நரி பிடிப்பது சட்டப்படி குற்றமாகும் என்பதை மக்களுக்கு வனத்துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதுதொடா்பாக, மாவட்ட வன அலுவலா் முருகன் கூறுகையில், வங்கா நரி பிடித்து ஜல்லிக்கட்டு நடத்துவது வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி குற்றமாகும். இதையடுத்து வங்கா நரியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
வங்கா நரியைப் பிடித்தால் 3 ஆண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். எனவே வனத்துறை சாா்பில் ஆத்தூா், வாழப்பாடி, கருமந்துறை வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கண்காணிப்புடன் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெல்லப்போவது யாா்?

ஏலகிரி மலையில் குடிநீரின்றி குரங்குகள் திண்டாட்டம்: தொட்டிகளில் நீா் நிரப்ப கோரிக்கை

நம்பிக்கை ஏற்படுத்தும் செயல்பாடுகள்

நாளை கோடைகால இலவச வாலிபால் பயிற்சி முகாம் தொடக்கம்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

