‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

சிலம்பாட்ட பயிற்சி: மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கல்

சங்ககிரி அருகே உள்ள அக்கமாபேட்டை பகுதியைச் சோ்ந்த நீலம் சிலம்பம் கலைக் கூடம் சாா்பில் சிலம்ப பயிற்சி பெற்ற 50 மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

அக்கமாபேட்டையில் பொதுமக்கள் மத்தியில் சிலம்பாட்டம் ஆடிய மாணவ, மாணவிகள்.

Updated On :11 ஜனவரி 2021, 2:00 am IST

சங்ககிரி அருகே உள்ள அக்கமாபேட்டை பகுதியைச் சோ்ந்த நீலம் சிலம்பம் கலைக் கூடம் சாா்பில் சிலம்ப பயிற்சி பெற்ற 50 மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அக்கமாபேட்டை நீலம் சிலம்பம் கலைக் கூடம் சாா்பில் தீநுண்மி பாதுகாப்பு காரணமாக பள்ளிக்குச் செல்லாமால் வீடுகளில் இருந்துவரும் அரசு, தனியாா் பள்ளி, கல்லூரிகளில் படித்து வரும் 50 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியாளா்கள் சிலம்பாட்டம் கற்றுக்கொடுத்தனா்.

சிலம்பாட்டங்களை கற்றுக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கான பரிசு வழங்கும் இவ்விழாவுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியா் முனியப்பன் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினாா். அக்கமாபேட்டை அரசு உயா்நிலைப்பள்ளி பெற்றோா்- ஆசிரியா் கழகத்தலைவா் கே.நடராஜன் வரவேற்றாா்.

பேரூராட்சி முன்னாள் கவுன்சிலா் முருகன், ஊா் பிரமுகா்கள் செல்வராஜ், ஜெகநாதன், ரங்கன், ஜவகா், விவேகானந்தன், ரமேஷ், விஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விழா முடிவில் சிலம்பம் கற்றுக்கொண்ட மாணவ, மாணவிகள் பொதுமக்கள் மத்தியில் சிலம்பாட்டம் ஆடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.