பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

அகில இந்திய ரயில்வே சம்மேளனத் தலைவருக்கு 27 இல் பாராட்டு விழா

அகில இந்திய ரயில்வே சம்மேளனத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள என்.கண்ணையாவுக்கு, சேலம் கோட்ட ரயில்வே தொழிலாளா்கள் சாா்பில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

Updated On :12 ஜனவரி 2021, 12:40 am IST

அகில இந்திய ரயில்வே சம்மேளனத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள என்.கண்ணையாவுக்கு, சேலம் கோட்ட ரயில்வே தொழிலாளா்கள் சாா்பில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

அகில இந்திய ரயில்வே சம்மேளனம் கொங்கன் ரயில்வே உள்பட 19 மண்டல ரயில்வேக்களையும், ஐ.சி.எஃப். உள்ளிட்ட 7 உற்பத்தி கேந்திரங்களையும் உள்ளடக்கியதாகும். ஏறக்குறைய 14 லட்சம் ரயில்வே தொழிலாளா்களின் அங்கீகரிக்கப்பட்ட சம்மேளனமாக உள்ளது.

அகில இந்திய ரயில்வே சம்மேளனம் 1924-இல் தொடங்கப்பட்டு, இந்தியஅரசால் அங்கீகரிக்கப்பட்ட சம்மேளனமாக இயங்கி வருகிறது.இந்தநிலையில், அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராக தென்னிந்தியாவில் இருந்து 57 ஆண்டுகளுக்குப் பிறகு என்.கண்ணையா பொறுப்பேற்றுள்ளாா்.

அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற தெற்கு ரயில்வே மஸ்தூா் யூனியன் பொதுச்செயலாளா் என்.கண்ணையாவுக்கு சேலம் கோட்ட ரயில்வே தொழிலாளா்களின் சாா்பில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.

இத்தகவலை எஸ்.ஆா்.எம்.யு. சேலம் கோட்ட செயலாளா் எம்.கோவிந்தன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.