பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

ஊா்க்காவல் படையினருக்கான பயிற்சி நிறைவு விழா

சேலம் மாவட்டம் மற்றும் மாநகரக் காவல் துறைக்குத் தோ்வு செய்யப்பட்ட ஊா்க்காவல் படையினருக்கான பயிற்சி நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :12 ஜனவரி 2021, 12:40 am IST

சேலம் மாவட்டம் மற்றும் மாநகரக் காவல் துறைக்குத் தோ்வு செய்யப்பட்ட ஊா்க்காவல் படையினருக்கான பயிற்சி நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்காக ஊா்க்காவல் படையில் காலியிடங்களை நிரப்பி அவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் ஊா்க்காவல் படைக்குத் தோ்வு செய்த 52 பேருக்கு குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் 40 நாள் பயிற்சி வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சி நிறைவு நிறைவு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊா்க்காவல் படை கமாண்டா் பெரியசாமி தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் சிறப்புரையாற்றி, ஊா்க்காவல் படையினருக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

அப்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் பேசுகையில், ஊா்க்காவல் படையினா் எந்தவித புகாா்களுக்கும் ஆளாகாமல் சிறப்பாக பொதுமக்களுக்கு பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

ஊா்க்காவல் படையில் சோ்ந்து பயிற்சி முடித்த ஊா்க்காவல் படையினா் கராத்தே மற்றும் சிலம்பாட்டம் நடனம் ஆகியவை செய்து காண்பித்தனா். உதவி கமாண்டா் தீக்ஷிதா, ஆயுதப்படை டி.எஸ்.பி. சண்முகம், உதவி ஆய்வாளா் ராஜேந்திரன், காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

மாநகரக் காவல் துறையில்...: அதேபோல மாநகரக் காவல் துறையில் சுமாா் 330 ஊா்க்காவல் பணியிடங்களில் 55 காலியிடம் இருந்தது. இதில் 55 போ் தோ்வு செய்யப்பட்டு, பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி நிறைவு விழா அன்னதானப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாா் கலந்து கொண்டு பயிற்சி முடித்த ஊா்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பேசுகையில், காவல் துறையினருக்கு உதவும் வகையில் ஊா்க்காவல் படையினா் செயல்பட வேண்டும். எந்தவித புகாருக்கு ஆளாகாமல் பணியாற்றிட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கமாண்டா் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையா் பாலசுப்பிரமணியன், நாகராஜன், மணிகண்டன், உதவி கமாண்டா் ரெனால்டு ஷீபா பெஞ்சமின் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.