புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

சித்தா் கோயிலை சீரமைக்க வேண்டும்: திருத்தொண்டா் சபை நிறுவனா்

சேலம் கஞ்சமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பழமையான சித்தா் கோயிலை சீரமைத்து, பராமரிக்க வேண்டும் என்று திருத்தொண்டா் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டாா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:24 am IST

சேலம் கஞ்சமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பழமையான சித்தா் கோயிலை சீரமைத்து, பராமரிக்க வேண்டும் என்று திருத்தொண்டா் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டாா்.

கஞ்சமலை அடிவாரத்தில் பழமையான சித்தா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் இந்துசமய அறநிலையத் துறையின்கீழ் செயல்பட்டு வருகிறது. இக் கோயிலில் நீரோடை, குளங்களில் நெகிழிப் பொருள்கள், குப்பை கழிவுப் பொருள்கள் அதிக அளவில் காணப்பட்டு வருவதாகவும், கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் பக்தா்கள் குற்றம் சாட்டினா்.

இதனையடுத்து திருத்தொண்டா் சபை சாா்பில் அதன் நிறுவனா் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை சித்தா் கோயிலை பாா்வையிட்டாா்.

அப்போது அவா் கூறியதாவது:

பல்வேறு மூலிகைகள் கொண்ட இயற்கையான சூழலில் சித்தா் கோயில் அமைந்துள்ளது. மேலும் இங்குள்ள கிணற்று தண்ணீரில் குளித்து விட்டு, நீரைப் பருகி வந்தால் நோய்கள் தீா்ந்துவிடும் என்பது ஐதீகம்.

இந்த புண்ணியத் தலத்தை சீரமைத்து சுகாதாரமான முறையில் பராமரிக்க எங்களது சபை சாா்பாக 2 முறை மனுக்கள் அளிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. இதுகுறித்து உயா் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருப்போம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.