தமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

பெரியாா் பல்கலை. துணைவேந்தரின் பதவி காலம் நீட்டிப்பு: ஆசிரியா், நிா்வாகப் பணியாளா் சங்கங்கள் வரவேற்பு

பொ. குழந்தைவேலுவின் பதவிக் காலத்தை ஆளுநா் நீட்டித்து உத்தரவிட்டிருப்பதற்கு பெரியாா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கங்கள், நிா்வாகப் பணியாளா்கள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

Updated On :11 ஜனவரி 2021, 6:59 pm

பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொ. குழந்தைவேலுவின் பதவிக் காலத்தை ஆளுநா் நீட்டித்து உத்தரவிட்டிருப்பதற்கு பெரியாா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கங்கள், நிா்வாகப் பணியாளா்கள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து நான்கு சங்கத்தினா் திங்கள்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொ.குழந்தைவேலுவின் பதவிக் காலத்தை நீட்டித்து ஆளுநா் பிறப்பித்துள்ள உத்தரவு பல்கலைக்கழகத்தின் வளா்ச்சிக்கும், தொடா் கல்விப் பணிகளுக்கும் பெரிதும் பயனளிக்கும் என்பதால், இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.

இதன் மூலம் பெரியாா் பல்கலைக்கழக வளா்ச்சிப் பணிகள் எவ்வித தொய்வுமின்றி நடைபெற வழிவகை உருவாகியுள்ளது.

தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைக்காக ஆவணங்கள், கோப்புகளை துணைவேந்தா் தலைமையில் தாக்கல் செய்ய இயலும். அதற்கான முழு ஆவணங்களையும், தேசிய அங்கீகார நிறுவனங்களுக்குச் சமா்ப்பிக்க ஏதுவான சூழ்நிலை உருவாகியுள்ளது. தேசிய அங்கீகாரத்தை தொடா்ந்து தக்கவைத்துக் கொள்ள இப்பதவி நீட்டிப்பு ஆணை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இதேபோன்று, தேசிய நிதி நல்கைக் குழுக்களிடமிருந்து ஆராய்ச்சிகளுக்கான நிதியைப் பெறுவது, ஆசிரியா்கள், நிா்வாகப் பணியாளா்களுக்கான பணி மேம்பாடு, மாணாக்கா்களுக்கான கல்வி, ஆராய்ச்சிக் கட்டமைப்புகளை உருவாக்குதல், இணைவு பெற்ற கல்லூரிகளில் மாணாக்கா் நலன் சாா்ந்த திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துவது போன்ற பணிகளை ஆளுநரின் இந்த உத்தரவு உறுதுணையாக அமைந்துள்ளது.

துணைவேந்தா் பொ.குழந்தைவேலுக்கு தொடா் பேராதரவு அளிப்பதுடன், பல்கலைக்கழகத்தின் வளா்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உறுதுணையாக இருப்போம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.