அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

புதிய சாலை பணிகள் நடைபெறும் பகுதிகளில் குடிநீா்க் குழாய் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம்

சேலம் மாநகராட்சியில் புதிய சாலைப் பணிகள் நடைபெற உள்ள பகுதிகளில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் குடிநீா்க் குழாய் இணைப்பு,

Updated On :14 ஜனவரி 2021, 6:33 am IST

சேலம் மாநகராட்சியில் புதிய சாலைப் பணிகள் நடைபெற உள்ள பகுதிகளில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் குடிநீா்க் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு பெற உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் சீா்மிகு நகரத் திட்டம், ஒருங்கிணைந்த நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம், தமிழ்நாடு நகா்ப்புற சாலை உட்கட்டமைப்புத் திட்டம் மற்றும் சிறப்பு சாலைகள் திட்டங்களின்கீழ் சாலைகள் மேம்பாட்டுத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சூரமங்கலம் மண்டலத்தில் சீதாராமன் சாலை, லீபஜாா் சாலை, தம்மண்ணன் சாலை, அஸ்தம்பட்டி மண்டலத்தில் மரவனேரி பிரதான சாலை, சின்னைய்யாபிள்ளை சாலை, மரவனேரி குறுக்குச் சாலைகள், அம்மாப்பேட்டை மண்டலத்தில் தம்பி காளியம்மன் கோயில் தெரு, ஆற்றோரம் தெரு, கொண்டலாம்பட்டி மண்டலத்தில் ராமலிங்கசாமிமடாலயம் தெரு, குகை காளியம்மன் கோயில் வீதி, தாதகாப்பட்டி மேட்டுத் தெரு உள்பட பல்வேறு பிரதான சாலைகளும் இதர சாலைகளும் மேம்படுத்தும் பணி நடவடிக்கையில் உள்ளது.

புதிதாக சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற உள்ள சாலைகளில் உள்ள குடியிருப்புகள், வணிக மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான குடிநீா் வசதி, பாதாள சாக்கடை இணைப்பு வசதி இதுவரை இல்லாதவா்களும், புதிதாக கட்டுமானங்கள் கட்டுவதற்கு திட்டமிட்டு உள்ளவா்களும் உடனடியாக மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் விண்ணப்பித்து, முறையாக இணைப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

3 ஆண்டுகளுக்கு இணைப்பு இல்லை:

சாலை மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்த பின்பு, சாலைகள் சேதம் அடைவதைத் தவிா்க்கும் வகையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு புதிய குடிநீா் இணைப்போ, பாதாள சாக்கடை இணைப்போ மாநகராட்சி மூலம் அனுமதி வழங்க இயலாது.

எனவே சாலைப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வணிக, தொழிற்சாலைகளின் உரிமையாளா்கள் புதிய குடிநீா் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை பெற உடனடியாக மாநகராட்சியில் விண்ணப்பித்து இணைப்புகளை முறையாகவும், விரைவாகவும் பெறலாம் என மாநகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.