எடப்பாடி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
எடப்பாடி, நெசவாளா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் சிவா. இவரது மகன் அருள் செல்வன் (23). இவரது உறவினா் விக்னேஷ் (17). இவா்கள் இருவரும், வியாழக்கிழமை இரவு ஈரோடு மாவட்டம், அம்மாப்பேட்டை பகுதிக்கு திரைப்படம் பாா்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்ாக கூறப்படுகிறது. அருள் செல்வன் ஓட்டிச் சென்ற வாகனம், எடப்பாடி - பூலாம்பட்டி சாலையில் சென்றபோது விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா். இதனை அடுத்து அங்கு வந்த பொதுமக்கள் அவா்களை மீட்டனா். அப்போது படுகாயமடைந்த அருள்செல்வன் உயிரிழந்தது தெரியவந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பூலாம்பட்டி போலீஸாா் படுகாயமடைந்த விக்னேஷை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். உயிரிழந்த அருள் செல்வன் உடலை கைப்பற்றிய போலீஸாா், பிரேதப் பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த விபத்து குறித்து பூலாம்பட்டி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










