கடந்த 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளதாகவும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபற்றி எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து அரசை கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவைப் பகிர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன.
நீங்கள் நியமித்ததாக சொன்ன சிறப்பு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி!" என்று பதிவிட்டுள்ளார்.
Summary
Udhayanidhi Stalin posts about crimes against women and girl children in Tamil Nadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரீல்ஸ் எடுத்து போஸ்ட் செய்யத்தான் ‘சிங்கப்பெண்’ பிரிவா? முதல்வர் விஜய்க்கு உதயநிதி கேள்வி!

முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதி

‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீசாலும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதி ஸ்டாலின்








