ஆத்தூா்: கூலமேடு ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு தள்ளிவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.
ஆத்தூரை அடுத்துள்ள கூலமேடு ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் கரிநாளுக்கு மறுநாள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி மாடுகள், மாடுபிடி வீரா்களுக்கு கரோனா பரிசோதனை செய்து டோக்கன் அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் சி.அ.ராமன் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது வாடிவாசல் பகுதி சேறும் சகதியுமாக இருந்துள்ளது.
ஆகையால் தேதி குறிப்பிடாமல் கூலமேடு ஜல்லிக்கட்டை தள்ளி வைப்பதாக மாவட்ட ஆட்சியா் அறிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீண்போகாத ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை..! ஆட்ட நாயகன் விருது வென்ற புலம்பெயர்ந்த வீரர்!

தொடர் வெற்றிகள்... நூறு சாமியிலும் அசத்துவாரா ஸ்வாசிகா?

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா புதிய சாதனை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


