கால்பந்து உலகக் கோப்பையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த வீரர்களை தனது அணியில் இணைத்த ஆஸ்திரேலியா ”கால்பந்து அனைவருக்குமானது” எனக் கூறியிருந்தது.
உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே புலம்பெயர்ந்த கால்பந்து வீரர் நெஸ்டோரி இரங்குண்டா (20 வயது) ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தியுள்ளார்.
கனடாவில் நடைபெற்ற துருக்கி - ஆஸ்திரேலிய கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-0 என அபார வெற்றியைப் பெற்றது.
இந்தப் போட்டியில் தொடக்கதிலேயே 27ஆவது நிமிஷத்தில் நெஸ்டோரி இரங்குண்டா சிறப்பான கோல் அடித்தார். குறைந்த வயதில் (20 ஆண்டுகள், 125 நாள்கள்) ஆஸ்திரேலிய அணிக்காக கோல் அடித்து சாதனை படைத்த இவருக்குத்தான் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான புருண்டியில் ஏற்பட்ட சிவில் போரினால் கிகோமா என்ற தான்சானியாவின் அகதிகள் முகாமில் பிறந்த இவர் குழந்தையாக இருக்கும்போதே ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்.
அடிலெய்டு யுனைடெட் அணியில் டிஃபென்சர்களை வீழ்த்தி 16 கோல்கள் அடித்து அசத்தினார். லியோனல் மெஸ்ஸி பாணியில் விளையாடும் இவர் ஆஸி.யின் நட்சத்திர வீரராக புகழப்படுகிறார். பின்னர் ஜெர்மனியின் புகழ்பெற்ற பயர்ன் மியூனிக் அணிக்கு 2024ல் தேர்வானார்.
புலம்பெயர்ந்த வீரராக இருந்தாலும் இவரது திறமை மீது நம்பிக்கை வைத்த ஆஸ்திரேலியா அணி அவரை அணியில் இணைத்த நம்பிக்கை வீண்போகவில்லை என்பதை முதல் போட்டியிலேயே நிரூபித்துள்ளார்.
Summary
Australia immigrant player Nestory Irankunda is won the Superior Player of the Match award
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கால்பந்து அனைவருக்குமானது..! புலம்பெயர்ந்தோரை ஆதரிக்கும் ஆஸ்திரேலியா!

பயிற்சிதான் காரணம்... ஆட்ட நாயகன் முகமது சிராஜ் பேட்டி!

நான் 100% பந்துவீச்சாளர், 100% பேட்டர்..! ஆட்ட நாயகன் விருது வென்ற மாதவ் திவாரி!

ஆர்சிபியை வீழ்த்தியது எப்படி? ஆட்ட நாயகன் மிட்செல் மார்ஷ் பேட்டி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




