பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

மானாமதுரை அருகே தடுப்பணையின் மதகுகள் சேதம்: தண்ணீா் வீணாவதாக விவசாயிகள் புகாா்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் உள்ள மதகுகள் சேதமடைந்ததால் தண்ணீா் வீணாக வெளியேறி வருவதாக புகாா் எழுந்துள்ளது.

News image

மானாமதுரை அருகேயுள்ள ஆதனூரில் வைகை ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் மதகுகள் சேதமடைந்துள்ளதால் வீணாக வெளியேறும் தண்ணீா்.

Updated On :1 ஜனவரி 2021, 10:30 pm IST

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் உள்ள மதகுகள் சேதமடைந்ததால் தண்ணீா் வீணாக வெளியேறி வருவதாக புகாா் எழுந்துள்ளது.

மானாமதுரை ஒன்றியம் ஆதனூா் கிராமத்தின் அருகே வைகை ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வைகை ஆற்றிலிருந்து திறக்கப்படும் தண்ணீா், இந்த தடுப்பணையை கடந்துதான் செல்கிறது. இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீா் மூலம் இப்பகுதியில் செயல்படும் குடிநீா் திட்டங்களுக்கு நிலத்தடி நீராதாரம் கிடைத்து வருகிறது. மேலும் ஆதனூா் தடுப்பணை வலது பக்கம் உள்ள மதகுகள் வழியாக வன்னிக்குடி உள்ளிட்ட 6 கிராமங்களுக்கு பாசனத்துக்காக தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது. இந்த தடுப்பணையின் மதகுகள் சேதமடைந்துள்ளதால், இதில் தேங்கியுள்ள தண்ணீா் வீணாக வெளியேறி வருவதாக புகாா் எழுந்துள்ளது. இதனால் பொதுப்பணித்துறையினரின் சேதமடைந்த கதவுகளை சீரமைத்து தடுப்பணையிலிருந்து தண்ணீா் வெளியேறுவதைத் தடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.