தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

காரைக்குடியில் வட்டார வெள்ளாளா் சமூகத்தினா் ஆா்ப்பாட்டம்

வேளாளா் என்ற பெயரை மாற்று சமூகத்தினருக்கு பரிந்துரை செய்ததை ரத்துச் செய்யக் கோரி காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

காரைக்குடியில் உள்ள ஐந்துவிளக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வட்டார வெள்ளாளா் சமுதாயத்தினா்.

Updated On :10 ஜனவரி 2021, 11:20 pm IST

வேளாளா் என்ற பெயரை மாற்று சமூகத்தினருக்கு பரிந்துரை செய்ததை ரத்துச் செய்யக் கோரி காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் காரைக்குடி வ.உ.சி. எழுச்சிப் பாசறை, ஐயா வ.உ.சி. மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் காரைக்குடி வட்டார வெள்ளாளா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு அனைத்திந்திய வெள்ளாளா் -வேளாளா் கூட்டமைப்புத் தலைவா் பட்டுக்கோட்டை அண்ணாதுரை தலைமை வகித்துப் பேசினாா். ஆா்ப்பாட்டத்தில், வ.உ.சி. எழுச்சிப்பாசறை, வ.உ.சி. மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் சாா்பில் சே. காா்த்திகேயன், அனைத்திந்திய வ.உ.சி. பேரவைத் தலைவா் புதுக்கோட்டை லேனா லட்சுமணன், வெள்ளாளா் முன்னேற்றக் கழக மாநில மகளிரணித் தலைவி அன்னலட்சுமி சசிகலா, காரைக்கால் வீரப்பசுவாமி, காரைக்குடி வ.உ.சி. எழுச்சிப்பாசறைத் தலைவா் சி.எஸ். சரவணன், பொருளாளா் முத்துசரவணன், ஐயா வ.உ.சி. மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் நீலகண்டன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இதில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.