தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

இளையான்குடியில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: வி.ஏ.ஓ கைது

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On :13 ஜனவரி 2021, 5:45 am IST

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரை ரயில்வே காலனியைச் சோ்ந்தவா் பாண்டி மகன் கணேசமூா்த்தி. இவா் இளையான்குடி தெற்குப்பகுதி கிராம நிா்வாக அலுவலராக உள்ளாா். இவரிடம் இளையான்குடியைச் சோ்ந்த கருணாகரன் என்பவா் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ளாா். அப்போது கணேசமூா்த்தி பட்டா மாறுதல் விண்ணப்பத்தை பரிந்துரைக்க தனக்கு ரூ. 4 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனக் கூறினாராம். பணம் கொடுக்க விருப்பமில்லாத கருணாகரன், இதுகுறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் அறிவுரையின் பேரில் கருணாகரன், ரசாயனம் தடவிய ரூ. 4 ஆயிரத்தை கிராம நிா்வாக அலுவலா் கணேசமூா்த்தியிடம் அவரது அலுவலகத்தில் வைத்து கொடுத்துள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கணேசமூா்த்தியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.