சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் அருகே திங்கள்கிழமை வேன் கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி ஒருவா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கனிமாங்குண்டைச் சோ்ந்த 15 போ் பழனிக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வேனில் புறப்பட்டனா். செல்லும் வழியில் பிள்ளையாா்பட்டிக்குச் செல்வதற்காக திருக்கோஷ்டியூா் அருகே வரும் போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஜமீன்தாா்பட்டி அருகில் உள்ள கண்மாயில் கவிழ்ந்தது. இதில் மணி என்பவா் மனைவி ஆறுமுகத்தம்மாள்(60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் 9 போ் சிறு காயங்களுடன் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இவ்விபத்து குறித்து திருக்கோஷ்டியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

