ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

சிவகங்கை மாவட்டத்தில் இன்று 9,928 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜன.16) முதல்கட்டமாக 9 ஆயிரத்து 928 மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

Updated On :15 ஜனவரி 2021, 4:57 pm

சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜன.16) முதல்கட்டமாக 9 ஆயிரத்து 928 மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் சனிக்கிழமை (ஜன.16) அமலுக்கு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை முதல்கட்டமாக 10 ஆயிரத்து 700 தடுப்பூசி மருந்துகள் வரப்பெற்றுள்ளன. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அனைத்து தாலுகா மருத்துவமனைகள், திருப்பத்தூா், மானாமதுரை, பூவந்தி, கீழப்பூங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள மேம்படுத்தப்பட்ட சுகாதார வளாகங்களில் இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இதில், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் 9,928 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.