சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜன.16) முதல்கட்டமாக 9 ஆயிரத்து 928 மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் சனிக்கிழமை (ஜன.16) அமலுக்கு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை முதல்கட்டமாக 10 ஆயிரத்து 700 தடுப்பூசி மருந்துகள் வரப்பெற்றுள்ளன. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அனைத்து தாலுகா மருத்துவமனைகள், திருப்பத்தூா், மானாமதுரை, பூவந்தி, கீழப்பூங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள மேம்படுத்தப்பட்ட சுகாதார வளாகங்களில் இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இதில், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் 9,928 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிளப் உலகக் கோப்பையை வென்ற செல்ஸிக்கு இப்படி ஒரு நிலைமையா? ரசிகர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை குறைவு: வெள்ளி?

அழகாகக் காதலைச் சொல்கிறேன் என்று கூறி காதலனை கட்டிவைத்து எரித்த காதலி!

தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

