40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சிந்திப்பீர்! வாக்களிப்பீர்! அதற்கு முன் கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வீர்

2021 சட்டப்பேரவை தேர்தல் திருவிழா தமிழகம் முழுவதும் கலைக்கட்ட துவங்கியுள்ளது.

News image

சிந்திப்பீர்! வாக்களிப்பீர்! அதற்கு முன் கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வீர்

Updated On :14 ஜனவரி 2021, 10:07 am IST

2021 சட்டப்பேரவை தேர்தல் திருவிழா தமிழகம் முழுவதும் கலைக்கட்ட துவங்கியுள்ளது.

எப்போதும் இல்லாத அளவிற்கு அனைத்து அரசியல் கட்சியினரும் இப்போதே கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என கரோனா காலத்திலும் தேர்தல் திருவிழா கொண்டாட்டத்திற்கு பஞ்சமில்லாமல் அரங்கேறி வருகின்றனர்.

குறிப்பாக அரசியல் கட்சியினர் நடத்தும் பிரசார கூட்டங்களில் பங்கேற்க வருவோரில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவது கிடையாது. கரோனா என்ற பெருஞ்தொற்று இதுவரை இல்லாத அளவிற்கு ஒட்டுமொத்த உலகையும் சுமார் 6 மாதங்கள் முடக்கிப்போட்டது.  

தற்போது வரை பள்ளி கல்லூரிகள் விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் 100% திறப்புக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு 50% மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது.

இப்படி இருக்க பிரசார கூட்டங்கள் மட்டும் எந்த தடையுமின்றி ஜமாப் மேளங்களுடனும், பெரும் கூட்டத்துடன் கோலாகளமாக நடந்து வருகிறது. ஆளும் கட்சி , எதிர் கட்சி, புதிய கட்சி, எதுவாக இருந்தாலும் பிரசார கொண்டாடத்தில் மாற்றம் இல்லை.

பிரசார கூட்டங்களில் பேசும் தலைவர் பல்வேறு குற்றச்சாட்டு, அறிவிப்புகளை வெளியிட்டாலும் 5 ரூபாய் முகக்கவசம் அணிய வலியுறுத்த தவறுகின்றனர்.

எதையெல்லாம் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில்  வலியுறுத்தியதோ அதற்கு எதிரான விஷயங்களை எந்த மாற்றங்களும் இல்லாமல் செய்து வருகிறோம், சமூக இடைவெளி, கூட்டம் கூடுதல், கட்டாய முகக்கவசம் அனைத்திலும்.

3 மாதங்களுக்கு பின் நடைபெற உள்ள தேர்தலுக்கு இப்போதே பிரசாரம் மேற்கொண்டு வரும் அரசியல் கட்சியினர் வழக்கமான பிரசார முறைகளில் சில மாற்றங்களை செய்து, பயிற்சி முறையிலாவது நடைமுறைபடுத்த முயன்றால், எதிர்பாராதவிதமாக பெருந்தொற்று அதிகாரித்தாலும் எளிதில் கட்டுப்படுத்த முடியும்.

சித்திப்பீர் வாக்களிப்பீர் அதற்கு முன் தற்காத்து கொள்வீர் என்ற வாசகத்தையாவது பயன்படுத்தலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.