பத்து மாதம் குழந்தையைச் சுமக்கிறாள் அன்னை
பத்தியமாக உணவருந்தி காக்கிறாள் சேயை !
சுமையை அவள் சுகமாகவே கருதுகின்றாள்
சுகப்பிரசவம் வேண்டுமென்று நாளும் நடக்கிறாள் !
தவவாழ்க்கை வாழ்கிறாள் என்றால் மிகையன்று
தவம் இருந்தே குழந்தையை ஈன்று எடுக்கிறாள் !
ஒவ்வொரு அடியையும் கவனமாக வைக்கின்றாள்
ஒவ்வொரு நொடியும் குழந்தையைக் காக்கின்றாள் !
கருவுற்ற தகவல் அறிந்ததும் மனம் மகிழ்கின்றாள்
கருவுற்ற நாள் முதலாய் கனவுகள் காண்கின்றாள் !
வயிற்றுக்குள் குழந்தை எட்டி உதைத்தபோதும்
வலியினைத் தாங்கி வாய் விட்டு சிரிக்கின்றாள் !
தாய்மொழியின் அருமை பெருமையை அவள்
தன்சேயுக்குக் கருவிலேயே கற்பித்து மகிழ்கின்றாள் !
தாயோடு சேர்ந்து சேயும் ரசிக்கும் இசை
தாயின் கருவிலிருந்தே கேட்கும் ஓசை !
பிரசவ வலி என்பது சொல்லில் அடங்காது
பிறப்பு மறுபிறப்பு எடுத்தே வருகின்றாள் !
தாய்மை அடைந்தமைக்காக மகிழ்ந்தபோதிலும்
தாயாகும் தருணம் உயிர் போய் உயிர் வரும் !
ஆண்கள் யாரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை
அன்புத் தாய்மார்கள் மட்டுமே உணர்ந்த உயிர்வலி !
முந்நூறு நாட்கள் அன்னை அவள் படும் பாடு
மண்ணில் மறக்கமுடியாத துன்பம் பெரும் பாடு !
சுமையையும் சுகமாகக் கருதுபவள் அன்னை
சுகத்தையும் சுமையாகக் கருதுவது குழந்தை !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே தற்காலிக சண்டை நிறுத்தம்: டிரம்ப் தகவல்!

அரசியல் சர்ச்சைகளுக்கு அடங்காத இசை!

கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம்: முதல்வர் பொறுப்புடன் செயல்பட போவது எப்போது?

தமிழ் சினிமாவின் முகம் மாற்றிய இயக்குநர்களின் முதல் படைப்புகளுக்கு 'இசை இளையராஜா'
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


